Total Pageviews

Wednesday, February 22, 2012

மதம் பிடித்த மானிடா...







மதம் பிடித்த 
மானிடா... 
மதத்தை எவனடா
கண்டுபிடித்தான்...
மானிடா...? 
மதம் கண்டுபிடித்தவன்
மட்டும் கிடைத்தால்
மதம்கொண்ட யானையைக்கொண்டு
சதம் அடிக்கத்தான்
தோன்றுகிறதெனக்கு....!
"மதம் என்றால் என்னடா...?"
என்று தினம் நீ கேளடா...
"என்ன மதம்...?"
என்று உன்னை கேட்பவனிடம்...!
நீ 
உருவானதுபோல்தான்
நானும் உருவானேன்...!
நீ வந்த வழியில்தான்
நானும் வந்தேன்...!
நீ சிரிப்பது வாயால் என்றால்
நானும்தான்...!
நீ ருசிப்பது நாக்கால் என்றால்
நானும்தான்...!
உனக்கு சுவாச வழி நாசி என்றால்
எனக்கும்தான்...!
உனக்கு குருதி சிவப்பென்றால்
எனக்கும்தான்...!
உனக்கு மறதி உண்டென்றால்
எனக்கும்தான்...!
உனக்கு நிர்வாணம் சபலமென்றால்
எனக்கும்தான்...!
உனக்கு மரண பயம்  உண்டென்றால்
எனக்கும்தான்...!
உன்னை நீல வானம் பிடிக்குமென்றால்
என்னையும்தான்...!
நமக்கு
காதலும் ஒன்றுதான்,
காமமும் ஒன்றுதான்,
ஏன்...?
கடவுள்கூட ஒன்றுதான்,
நாமிருவரும் இறந்து,
புதைத்தால்...
மண்ணில்தான்...!
எரித்தால்... 
நெருப்பில்தான்...!
இப்போது நீ சொல்லடா
எந்த விதத்தில்
நீ உயர்ந்தாய்...?
எந்த விதத்தில்
நான் தாழ்ந்தேன்...?
என்கேள்விக்கு பதில் சொல்
இல்லையேல்...
மனித மதம்
ஒன்றே என்று நீ
உரக்க சொல்...!




Post Comment