Total Pageviews
Saturday, April 21, 2012
Sunday, April 15, 2012
வெட்டுபவனை வெட்டுவேன்
கையை வெட்டியவனுக்கு
கனி கொடுக்க நான்
மரமல்ல....
மனிதன்..
வெட்டுபவனை வெட்டுவேன்
சுட்டவனை சுடுவேன்...
திட்டியவனை திட்டுவேன்..
பட்ட காயத்தை மறவேன்...
அறையை வாங்கியதும்
அடுத்த கன்னத்தை திருப்பி காட்ட
நான் இயேசுவுமல்ல...
அரை நிர்வாணமாக்கி,
கேவலபடுத்தி சிரித்தால்,
சாந்தமாக போக
நான் காந்தியுமல்ல...
நான்
வீரத்திற்கு விளக்கம் கொடுத்த
பிரபாகரனின் தம்பி(கை)
அவனே என் நம்பிக்கை...
நீ சிங்கமாக வந்தாலும்
நீ சிறுத்தையோடு வந்தாலும்...
புலியாக நின்று
உன்னை எதிர்கொள்வேன்...!
Post Comment
Saturday, April 14, 2012
Thursday, April 12, 2012
Friday, April 6, 2012
Tuesday, April 3, 2012
சரியா...? தப்பா..?
தப்பாம்....
செய்யக்கூடாதாம்,
செய்தால் தப்பாம்...
ஒருநாள் தெரியாமல்
செய்துவிட்டேன் தப்பை...
ஊரே அல்லோலப்பட்டது
"தப்பு செய்துவிட்டானே" என்று...!
"தப்பு செய்துவிட்டானே" என்று...!
முளச்சி மூணு எல விடல
இவன் செஞ்ச வேலையை பார்த்தியா...
என்று காதும் காதும்
கடித்துக்கொண்டார்கள்....
சில நாட்களுக்குப்பின்...
பத்திரிகை அடித்தார்கள்,
பந்தி பரிமாறினார்கள்,
வேட்டியையும்,
வேட்டியையும்,
சேலையையும் புதுசாக
உடுத்துங்கள் என்றார்கள்...
கட்டிலை அலங்கரித்தார்கள்...
கதவை மூட சொன்னார்கள்...
...........
...........
தப்பு செய்ய சொன்னார்கள்,
தப்பு செய்யக்கூடாது என்று
சொன்னவர்களே...!
தப்பு என்றோம்,
செய்யாவிட்டால் தான் தப்பு என்றார்கள்...!
"அதெப்படி...?
ஒரே செயல்,
காலம் தான் வேறு,
என்ன...
ஒரு வார இடைவெளிதான்...
என்ன...
ஒரு வார இடைவெளிதான்...
அப்போ செய்தால் தப்பு...
இப்போ செய்தால் தப்பும் சரியா...?"
என்று யோசித்துக்கொண்டே
செய்தோம் தப்பை
சரியாக...
சரியாக...
இப்போது நீங்ளே சொல்லுங்கள்
நான் செய்தது...
சரியா...?
தப்பா..?
Post Comment
Subscribe to:
Posts (Atom)