Total Pageviews

Sunday, April 15, 2012

வெட்டுபவனை வெட்டுவேன்

கையை வெட்டியவனுக்கு 
கனி கொடுக்க நான் 
மரமல்ல....
மனிதன்..
வெட்டுபவனை வெட்டுவேன் 
சுட்டவனை சுடுவேன்...
திட்டியவனை திட்டுவேன்..
பட்ட காயத்தை மறவேன்...
அறையை வாங்கியதும்
அடுத்த கன்னத்தை திருப்பி காட்ட 
நான் யேசுவுமல்ல...
அரை நிர்வாணமாக்கி,
கேவலபடுத்தி சிரித்தால்,
சாந்தமாக போக
நான் காந்தியுமல்ல...
நான் 
வீரத்திற்கு விளக்கம் கொடுத்த
பிரபாகரனின் தம்பி(கை)
அவனே என் நம்பிக்கை... 
நீ சிங்கமாக வந்தாலும்
நீ சிறுத்தையோடு வந்தாலும்...
புலியாக நின்று 
உன்னை எதிர்கொள்வேன்...! 


Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...