Total Pageviews

Tuesday, April 3, 2012

சரியா...? தப்பா..?


தப்பாம்....
செய்யக்கூடாதாம்,
செய்தால் தப்பாம்...
ஒருநாள் தெரியாமல் 
செய்துவிட்டேன் தப்பை...
ஊரே அல்லோலப்பட்டது
"தப்பு செய்துவிட்டானே" என்று...!

முளச்சி மூணு எல விடல 
இவன் செஞ்ச வேலையை பார்த்தியா...
என்று காதும் காதும் 
கடித்துக்கொண்டார்கள்....
சில நாட்களுக்குப்பின்...
பத்திரிகை அடித்தார்கள்,
பந்தி பரிமாறினார்கள்,
வேட்டியையும்,
சேலையையும் புதுசாக 
உடுத்துங்கள் என்றார்கள்... 
கட்டிலை அலங்கரித்தார்கள்...
கதவை மூட சொன்னார்கள்...
...........
...........
தப்பு செய்ய சொன்னார்கள்,
தப்பு செய்யக்கூடாது என்று 
சொன்னவர்களே...!
தப்பு என்றோம்,
செய்யாவிட்டால் தான் தப்பு என்றார்கள்...!
"அதெப்படி...?
ஒரே செயல்,
காலம் தான் வேறு,
என்ன...
ஒரு வார இடைவெளிதான்...
அப்போ செய்தால் தப்பு... 
இப்போ செய்தால் தப்பும் சரியா...?"
என்று யோசித்துக்கொண்டே
செய்தோம் தப்பை
சரியாக...
இப்போது நீங்ளே சொல்லுங்கள்
நான் செய்தது...
சரியா...?
தப்பா..?








Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...