பெண் பிறந்ததும் திருவிழா...
"சிறுமியாய்" இருக்கையில்
காதுகுத்து விழா...
"வயசுக்கு" வந்து விட்டால்,
குடிசைக்குள் விழா...
கொஞ்சம் நாள் கழித்து
"மஞ்சள் நீராட்டு" விழா...
குமரியாய் இருக்கையில்
"திருமண" விழா...
கருத்தரித்தால்
"வலையகாப்பு" விழா...
குழந்தை பிறந்தால்
"தாய்வீடு" விழா...
இத்தனை விழாக்கள்
போதாதென்று...
"மதர்ஸ் டே" யாம்
"மகளிர் தினமாம்..."
இதை நினைக்கும் பொது
"நான் நின்னா பொதுக்கூட்டம்...
நடந்தா ஊர்வலம்
படுத்தா பந்த்..." என்கிற
கானின் வரிகள்தான் என்னை
கடந்து செல்கிறது....!
பெண் வயசுக்கு வருவதும்
ஆணுக்காகத்தான்...!
வலையகாப்பு நடத்துவதும்
ஆணால் தான் என்பதை மறந்த
இந்த சமூகத்தை எந்த ஆணும்
குறைகூறவில்லை....
என்னைக்கு நாம் வயசுக்கு வந்தோம் என்று
இன்னும் சிந்தித்த நிலையில்,
ஆண்கள் எல்லோரும் இன்னும் அபலையாக...!
.....................
.....................
என்னதான் இருந்தாலும்,
என்னை பெற்றேடுத்தவளும் பெண்,
என்னுடன் பிறந்தவளும் பெண்,
என் மோட்டார் பைக்கின் பின் சீட்
காத்திருப்பதும் ஒரு பெண்ணுக்காகத்தான்....!
ஆகையால் சொல்கிறேன்...
"மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!
மகளிர்தின நல்வாழ்த்துக்கள்...!"
No comments:
Post a Comment
தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...