Total Pageviews

Tuesday, January 3, 2012

"அன்னை" என்கிற சொல்லுக்கு அவலம் ஏற்பட்டுவிட்டது...!









"அன்னை" என்கிற சொல்லுக்கு 
அவலம் ஏற்பட்டுவிட்டது...!
இப்போதெல்லாம் 
இலங்கைக்கு மட்டுமல்ல
இயற்கைக்கும் கூட தமிழனென்றால்
இளக்காரம் தான்....!

அன்று...
அன்னை இந்திராகாந்தி
தமிழனை அடித்தாள்....!
அதற்கு பிறகு...
அவள் மருமகள்
அன்னை சோனியாகாந்தி
தமிழனை அடித்தாள்....!
அடித்துகொண்டிருக்கிறாள்.... 
இப்போது 
அம்மாவும் சேர்ந்து அடிக்க 
ஆரம்பித்துவிட்டாள் தமிழனை...!
இத்தனை அன்னைகளும் 
அடித்தது போதாதென்று...
இப்போது 
நீயும் தமிழனை அடிக்கிறாயே
என் இயற்கை அன்னையே...!

காலில் கன்னிவெடி வைக்கிறான்
இலங்கைகாரன்...!
தலையில் ஏ. கே47  வைக்கிறான்
காஷ்மீர்காரன்....!
தோள்பட்டையில் அணுகுண்டு வைக்கிறான் 
பாகிஷ்தான்காரன்...!
இத்தனைக்கும் மத்தியில்
நாங்கள் உன்னை நினைத்து 
பெருமை பட்டுகொண்டிருந்தபோது...
விலா எலும்பில்
தானாகவே வந்து "தானே புயல்" 
என்கிற பெயரில் குத்துகிறாயே...
நாங்கள் என்ன செய்ய...!

கொஞ்சம்
'கோடை'களுக்கு முன்புதான் 
உன் மூத்த மகளை அனுப்பி
என் குடும்பங்களின் உயிரை
கொத்து கொத்தாக பறித்தாய்...
'சுனாமி' என்கிற பெயரில்...!
இப்போது 
உன் இளைய மகளையும் 
அனுப்பிவிட்டாயோ...?
"தானே போய் பறித்துகொள்
தமிழர்களின் உயிர்களை" என்று சொல்லி
ஏனென்றால் "தமிழன் உயிர்தானே"
என்றென்னிவிட்டாயோ...?
இயற்கையே.... 
உன்னை பெண் என்று 
வர்ணித்தவன்
வாயில் புழுதான் வைக்கும்...!
ஆம்...
இரக்க குணம் படைத்தவள் 
மட்டும்தானே பெண்ணாக முடியும்...
அரக்க குணம் படைத்த நீ
எப்படி பெண்ணாக முடியும்....?
என் குடும்பப் பெண்கள் தாலி தேடி 
கதறி அழுவதுன் 
காதில் கேட்கவில்லையா...? 
இல்லை கேட்டும்
கேட்காமல் இருக்கிறாயா
என் ஊர் அரசியல்வாதிகளைபோல்...?

இத்தனை 
அழிவுகளையும் செய்த 
உன்னை பெண் என்று சொல்வதே பாவம்...
இருந்தும்
உன்னை அன்னை என்கிறார்களே 
அவர்கள் மீதே என் கோபம்...
ஆதால்தான் சொல்கிறேன்
"அன்னை என்கிற சொல்லுக்கு 
அவலம் ஏற்பட்டுவிட்டதென்று...!"


(தானே புயலில் பாதித்த ஒரு பெண்ணின் கதறல்- செந்தில்பாரதி, கென்யா)
















Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...