Total Pageviews

Monday, January 30, 2012

படித்ததில் பிடித்தது....





திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
>
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
>
த்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
>
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
>
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு...ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
>
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
>
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
>
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
>
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
>
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
>
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
>
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
>
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
>
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
>
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
>
அழுவதும்... அணைப்பதும்...
>
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
>
இடைகிள்ளி... நகை சொல்லி...
>
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
>
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
>
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
>
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
>
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> 12
வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
> 4
வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
> 2
வருடமொருமுறை கணவன் ...
>
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
>
இது வரமா ..? சாபமா...?
>
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
>
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
>
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
>
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
>
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
>
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
>
தேவை அறிந்து... சேவை புரிந்து...
>
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
>
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
>
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
>
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
>
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
>
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
>
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
>
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
>
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
>
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
>
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
>
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
>
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
>
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
>
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
>
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
>
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
>
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
>
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
>
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
>
கிழித்துவிடு!
>
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
> (
இல்லையேல் விவாக ரத்து




Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...