இந்த
உலகத்தில் மதிக்கபடவேண்டியவர்கள்
இரண்டு ஜீவன்கள் மட்டுமே...!
மனநோயாளியும்
குழந்தைகளும்...!
ஆம்,
கள்ளம் கபடமில்லா
அவர்களின் சிரிப்பு...!
காண்பவரையெல்லாம்
அதிசயித்து பார்க்கும்
அவர்களின் பார்வை...!
இப்படியே தொடரும் அவர்களின்
செயல்கள்...!
நான் மீண்டும் ஒருமுறை
குழந்தை பருவத்திற்கு
செல்ல வேண்டும் என்று,
அம்மாவிடம்
கேட்டதுண்டு ஏக்கத்தோடு...!
இந்த
உலகத்தின் படைப்புகளில்
குழந்தை மட்டுமே,
உன்னதமான படைப்பு...!
சிறுமி,
பருவப்பெண்,
கன்னிப்பெண்
புதுப்பெண்,
மணப்பெண்,
அம்மா,
பாட்டி,
இப்படி எல்லா
நிலையிலும் பெண்கள்
அடையும் மகிழ்ச்சியைவிட
அளவிடமுடியாத
மகிழ்ச்சி என்றால் அது
குழந்தை பருவம் மட்டுமே...!
கடவுளின் படைப்பில்
இயற்கை அற்புதமானதாம்,
என்னை கேட்டால் ...
மனிதன் படைப்பு
குழந்தை...
அதைவிட அற்புதமானது
என்பேன்....!
செய்யமுடியாத
சிற்பம்.... -குழந்தைகள்
செயலிழக்க வைக்கும்,
சேட்டைகள்... -குழந்தைகள்
வியக்க வைக்கும்..
விந்தைகள்... -குழந்தைகள்
ராணுவ வீரனையும்
தன் முன் மண்டியிட செய்யும்
அன்பு ஆயுதங்கள்...! -குழந்தைகள்
கடவுளையும்
கைகட்ட வைக்கும்
கட்டளைகள்...! -குழந்தை கள்
காற்றைக்கூட
கண்சிமிட்ட வைக்கும்..
ரகசியங்கள்...! -குழந்தைகள்
பெற்றோர்களுக்கே
பதவி உயர்வு கொடுத்த...
பெரிய அதிசியங்கள்...! -குழந்தைகள்
பக்கத்து வீட்டார்களையும்
பதைபதைத்து,
பரிதவிக்க வைக்கும்
பண்பாடுகள்...! -குழந்தைகள்
இடியை
யோசிக்க வைப்பார்கள்...!
இம்சைகளை
யாசிக்க வைப்பார்கள்...!
இழிவை அழகுபடுத்துவார்கள்...!
அழகை இழிவுபடுத்துவார்கள்...! - குழந்தைகள்
கண்மூடி அழும்
பொம்மைகள்...!
கண் திறந்து தூங்கும்,
சிப்பிகள்...! -குழந்தைகள்
மின்னலை,
தன் நிலைபடுத்துவார்கள்...!
மீண்டும், மீண்டும்,
அழ வைப்பார்கள்...
அம்மாவையே
ஆனந்தமாக...! -குழந் தைகள்
இவர்களின்
அம்மனம்கூட,
அம்சமாக்கப்படும்...!
இவர்களின்
ஆயுள் அதிகமாக்கப்படும்...!
எச்சில் ஒழுகும் - வாய்,
யோசிக்க வைக்கும்- கண்கள்,
எல்லாவற்றையும்
தொட துடிக்கும்- கைகள்,
அடடா என்பதா...?
அப்பப்பா என்பதா...?
மொத்தத்தில்..
ஒரு வார்த்தையில்
சொல்லவேண்டுமெனில்
குழந்தைகள்,
நடமாடும் தெய்வங்கள்...!
excellent
ReplyDelete