Total Pageviews

Friday, December 9, 2011

அழகி...

ஆம்...
உண்மையாலுமே
அவள் அழகு தான்...!
நான் அவளை
நேசித்தால்...
... அவள் என்னை
யாசிக்கிறாள்...!
நான் அவளை
வாசித்தால்...
அவள் என்னை
சுவாசிக்கிறாள்...!
ஆம்...
உண்மையாலுமே
அவள் அழகு தான்...!
நான் உண்ணவில்லை என்றால்,
அவள் உறங்க மறுக்கிறாள்...!
நான் உறங்கவில்லை என்றால்,
அவள் உண்ண மறுக்கிறாள்...!
அவள் சிரித்தாள்,
என் சிரித்த முகம் பார்த்து...!
அவள் துடித்தாள்,
என் அழுகையை பார்த்து...!
ஆம்...
உண்மையாலுமே
அவள் அழகு தான்...!
அவள்,
எனக்காகவே அசைந்தாள்...
எனக்காகவே இசைந்தாள்...
எனக்காகவே ஓசையானாள்...
எனக்காகவே திசை மாற்றினாள்...
ஆம்...
மொத்தத்தில்,
எனக்காகவே உயிர் வாழ்ந்தாள்...
இப்போது
நீங்களே சொல்லுங்கள்...
என் அம்மா அழகுதானே...!

                                                               
                                                               கென்யாதமிழன்
                                                                செந்தில்பாரதி...
                                                            

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...