Total Pageviews

Friday, December 9, 2011

என் காதலின் பக்கங்கள்...




அன்புள்ள காதலிக்கு...


2004- மார்ச்...
நீநான்,
மற்றும் நம் தோழிகளிருவர்
நால்வரும்
நன்றாக சுற்றிதிரிந்த காலம்...!

2005...
உனது பெயரை,
நான் "காணாமல் போனவரைப்
பற்றிஅறிவிப்பு பலகையில்
பதவு செய்த காலம்....!

2005- மே...
இந்த ஒருநாள் மட்டும்
வசந்த காலம்...
உன்னைப் பார்த்ததால்...!

2006...
காணாமல் போனவரைப் பற்றிய
அறிவிப்பு பலகை உனது பெயரை
விரும்பி கேட்ட காலம்...!

2007- ஜூலை…
ஜூன்ஜூலை மாதங்களில்
பூக்கள் அதிகமாகப்
பூக்குமாம்...
ஆம்,
மீண்டும் உன்னை சந்தித்தேன்
அதே ஜூலை மாதத்தில்...!

2008 ஜனவரி…
நம் நட்பு
என்னிடம் பதவி உயர்வு
கேட்டது,
ஒருநாள் கனவில்...!

2008- பிப்ரவரி 14…
"காதலர் தினம்"
என்னிடம் கேட்டது,
என்னை கொண்டாடேன் என்று...!

2008- மார்ச்...
நட்பு என்னை பற்றி
கொஞ்சம் யோசியேன் என்றது...!

2008- ஏப்ரல்...
தபு சங்கரின் கவிதைகளை
நான் விரும்பி படித்த காலம்...!
ஆம்...
நான் காதலிக்க
ஆரம்பித்து விட்டேனாம்...!

2008- மே...  
காதல் என் நட்பை 
கடனாகக் கேட்ட  காலம்...!


2008- ஜூன்...
உன் மீதான காதல்,
என்னில் மொட்டானது…!

2008- ஜூலை...
உன் நட்பை காதலாக்கக் கூடாது
என்று முற்றுப் புள்ளி வைத்த நான்,
உன் நட்பை ஏன்
காதலாக்கக் கூடாது..? என்று
எனக்குள் கேள்வி எழுப்பினேன்...
பதில் கிடைத்தது,
காதலித்தால் உன்னை தான்
காதலிக்க வேண்டும் என்று...!

2008- ஆகஸ்ட்...
யோசித்து கொண்டிருந்த நான்
முடிவெடுத்தேன்...
ஆம்...!
உன்னை காதலிக்க
தொடங்கி விட்டேன்...

2008- செப்டம்பர், 1...
நட்புக்கு பதவி
உயர்வு கொடுத்த நாள்...!

2008- செப்டம்பர்,2…
மொட்டு மலரான நாள்,  

2008- செப்டம்பர்,3...
காதலை
உன்னிடம்  எப்படி சொல்லலாமென்று
யோசித்த நாள்…!

2008- செப்டம்பர்.4…
காதலை சொல்ல
கன்னியாகுமாரியை
தேர்வு  செய்த நாள்…!

2008- செப்டம்பர்.5…
காத்திருந்தேன் உன்னிடம்
காதலை சொல்ல…!

2008- செப்டம்பர்.6…
காத்திருந்தேன் உன்னிடம்
காதலை சொல்ல…!

2008- செப்டம்பர்.7…
 காத்திருந்தேன் உன்னிடம்
காதலை சொல்ல…!

2008- செப்டம்பர்.8. காலை 6:00 மணி…
நாம் இருவரும்
கன்னியாகுமரி கடற்கரையில்
காலடி வைத்த நேரம்…!

2008- செப்டம்பர்.8. காலை 7:00 மணி...
குளித்து முடித்து புத்தாடைகள்
அணிந்த நேரம்...!

2008- செப்டம்பர்.8. காலை 8:00 மணி...
காலை உணவை
முடித்த நேரம்...!

2008- செப்டம்பர்.8. காலை 9:00 மணி...
காந்தி மண்டபத்தில்
காலடி வைத்த நேரம்...!

2008- செப்டம்பர்.8. காலை 10:00 மணி...
காந்தி மண்டபத்தின்
கழுத்தில் நாம் இருவரும் நின்று
கடலை
ரசித்த நேரம்...!

2008- செப்டம்பர்.8. காலை 10:05 மணி
நாம்  இருவம் அருகருகே
அமர்ந்த நிமிடம்...!

2008- செப்டம்பர்.8. காலை 10:06 மணி
நான் உன்னிடம் காதலை
சொல்கிறேன்...

2008- செப்டம்பர்.8. காலை 10:07 மணி
ஐந்து நிமிடம் கழித்து
பதில் சொல் என்கிறேன்...!


2008- செப்டம்பர்.8. காலை 10:08 மணி...
2008- செப்டம்பர்.8. காலை 10:09 மணி...

2008- செப்டம்பர்.8. காலை 10:10 மணி...

2008- செப்டம்பர்.8. காலை 10:11 மணி...
...
...
...

2008- செப்டம்பர்.8. காலை 10:12 மணி...
என் காதல் என்று
இருந்தது நம் காதலானது...!
ஆம்,
என் காதலுக்கு
சம்மதம் தெரிவித்தாய்...!

2009- செப்டம்பர்.8…
2010- செப்டம்பர்.8…
2011- செப்டம்பர். 8…

இன்றோடு நம் காதலுக்கு வயது
மூன்று....!

                                                                                                                                                    - செந்தில் பாரதி …

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...