Total Pageviews

Friday, December 9, 2011

திரும(ன) நல்வாழ்த்துக்கள்


    Miss. திவ்யா...  Mr. அங்குராஜ்...    நாள்: 24 பிப்ரவரி, 2012

காதலின் பிரிவைவிட
நட்பின் பிரிவுக்கு
வலி அதிகமென்பதை,
உணர்ந்தேன் தோழி...
நீ உன் திருமண நாளை
என்னிடம் சொன்னபோது...!
இருந்தும் எனக்கு
ஆறுதல் சொன்னது
உன் ஸ்கூட்டியின்
பின் இருக்கை....
இது பிரிவு அல்ல
சேர்வு என்று...!
போதும் தோழி
என் ஆயுள் முழுதுக்கும்
இந்த ஐந்து சதம் நட்புக்காலம்...!
உனக்கு தெரியுமா...?
உன் திருமணத்தில்
அய்யராக இருந்து
தாலி எடுத்து கொடுக்காபோவது
என் நட்பென்று...!
 திருமணம் என்பது
சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா... ?
இல்லை...
சொர்க்கம்தான்
திருமணத்தில் நிச்சயிக்கபடுகிறது.
ஆம் தோழி...
இனிமேல்
உன் இன்பம் இரட்டிப்பாக்கப்படும்...
உன் துன்பம் பாதியாக்கப்படும்...
நீ
சூடும் மல்லிகைக்கு,
அர்த்தங்கள் அதிகமாக்கப்படும்...
ஆனால்..
ஆயுள் குறைக்கப்படும்...
சூரியனையும், சந்திரனையும்
பணி பரிமாற்றம் செய்யப்படும்...
பழக்கமில்லாதது வழக்கமாக்கபடும்...
வழக்கமானது பழக்கமாக்கபடும்...
மகிழ்ச்சி உன் தோழனாக்கபடும்...
மொத்தத்தில்...
நீ- யிலிருந்து,
நீங்களாவாய்...!
சொல்,
செயல்,
சிந்தனை,
மகிழ்ச்சி, இப்படி எல்லோரும்
இனிமேல் உங்கள் இருவரையும்
சந்திக்க கட்டளை இட்டுள்ளேன்...!
                      வாழ்த்துக்கள் தோழி...
              
                                                        இவள்..
                                                      உன். ராதா
(என் தோழி ராதாவின் தோழிக்கு(திவ்யா) திருமணமாம். ஆதலால் ராதா என்னிட திவ்யாவுக்காக  எழுதிதரச்சொல்லி     கேட்ட கவிதை.... )

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...