Total Pageviews

Friday, December 9, 2011

தேவதை பெண்


என்னவளே..
நீ
குளிக்கிறாய்...
நீர் புனிதமாகிறது...!
நீ
சாப்பிடுகிறாய்...
சோறு பசியாருகிறது...!
நீ
தூங்குகிறாய்...
கட்டில் விழித்துக்கொள்கிறது...!
நீ
விழித்துக்கொள்கிறாய்...
கட்டில் தூங்குகிறது...!
நீ
பல் தேய்க்கிறாய்...
பிரஷ் சுத்தமாகிறது..!
நீ
பவுடர் பூசுகிறாய்...
பவுடரின் வாசம்  கூடுகிறது...!

நீ
படிக்கிறாய்...
புத்தகம் உன்னை
மனப்பாடம் செய்துகொள்கிறது...!
நீ
தேர்வு எழுதுகிறாய்...
ஆசிரியர் பிரார்த்தனை செய்துகொள்கிறார்...!
நீ
தண்ணீர் குடிக்கிறாய்...
தண்ணீர் தாகம் தீர்த்துக்கொள்கிறது...!
நீ 
கண்ணாடி பார்க்கிறாய்...
கண்ணாடி உன்னை 
படம்பிடித்துக் கொள்கிறது...!
நீ 
பேசுவது கொள்ளை அழகு என்றால்...
நீ 
கோபப்படுவது கொள்ளைகொள்ளும் அழகு..!
ஆமாம்...
எனக்கு ஒரு சந்தேகம்,
நீ 
தேவதை உருவில்
வந்த பெண்ணா...?
இல்லை...
பெண் உருவில் 
வந்த தேவதையா...?

Post Comment

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

No comments:

Post a Comment

தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்...