சத்தியமாக,
எனக்கு பொய் பேச தெரியாது...!
அதேசமயத்தில்,
உண்மை பேசவும் தெரியாது...!
என் சிரித்த,
முகம் பார்க்கும்
குழந்தைகளெல்லாம் அழுகின்றார்கள்...!
என் அழுத,
முகம் பார்க்கும்
குழந்தைகளெல்லாம் சிரிக்கின்றார்கள்...!
இப்படித்தான்,
என் தந்தை இறந்த அன்று
ஊரே அழுதது,
என் தந்தையின்
சடலம் பார்த்து அல்ல...
கைகொட்டி சிரிக்கும்
என் செயல் பார்த்து...!
வீட்டிற்கு வரும்
விருந்தாளிகளிடம்
என்னை அறிமுகம் செய்வதை,
தவிர்க்கிறாள் அம்மா...!
அறியா பருவத்து தங்கை,
அவளே குளிக்கிறாள்...!
அம்மா வந்து,
என்னை குளிப்பாட்டுகிறாள்...!
சத்தியமாக,
எனக்கு பொய் பேச தெரியாது...!
அதேசமயத்தில்,
உண்மை பேசவும் தெரியாது...!
எனக்கு,
கடமை தெரியாது,
கடவுள் தெரியாது,
காதல் தெரியாது,
காமம் தெரியாது,
களவாடவும் தெரியாது,
.....
பசிப்பதும் தெரியாது,
புசிப்பதும் தெரியாது,
......
ருசிக்கவும் தெரியாது,
ரசிக்கவும் தெரியாது,
......
விளையாட்டும் தெரியாது,,
வினையும் தெரியாது,
.....
சத்தியமாக,
எனக்கு பொய் பேச தெரியாது...!
அதேசமயத்தில்,
உண்மை பேசவும் தெரியாது...!
இயற்கையும் தெரியாது...!
எழிலும் தெரியாது...!
.....
விண்ணும் தெரியாது...!
மண்ணும் தெரியாது...!
.....
பெண்ணும் தெரியாது...!
பொன்னும் தெரியாது...!
.....
மானம் தெரியாது...!
மனம் தெரியாது...!
மணமும் கூட தெரியாது...!
.....
உள்ளத்தில் தோன்றும்
உணர்வும் தெரியாது...!
உடலில் தோன்றும்
உணர்ச்சியும் தெரியாது...!
சத்தியமாக,
எனக்கு பொய் பேச தெரியாது...!
அதேசமயத்தில்,
உண்மை பேசவும் தெரியாது...!
தெரிந்த கேள்விகளுக்கு,
தெரியாத பதில்கள்...!
தெரிந்த பதில்களுக்கு,
தெரியாத கேள்விகள்
என்னுள் மவுனமாக...!
நான் பெத்தெடுத்து,
தத்தெடுக்கப்பட்டவனா...?
இல்லை...
தத்தெடுத்து
பெத்தெடுக்கப்பட்டவனா...?
.....
நான் வளரப்பட்டு,
வளர்க்கப்பட்டவனா...?
இல்லை...
வளர்க்கப்பட்டு,
வளரப்பட்டவனா...?
நான்
ஆரம்பத்தின் முடிவா?
இல்லை...
முடிவின் ஆரம்பமா...?
நான்
இருளின் வெளிச்சமா...?
இல்லை...
வெளிச்சத்தின் இருளா?
நான்
சந்தோஷத்தின் வலியா...?
இல்லை...
வலியின் சந்தோஷமா..?
....
நான்
கலையா...?
களையா...?
காவியமா...?
...
கரையா...?
கறையா...?
.....
ஒலியா...
ஓவியமா..?
நான் யார்...?
தயவு செய்து தெரிந்தால்
சொல்லுங்கள்...
நான் யார்...?
.....
தூரத்தில்
ஒரு சிறுமி தன்னை
கன்னத்தில் கிள்ளிய
அக்கா (வை) தாள்..
super than manakumuralai velipduthatheriyatha poi pesa theriyatha athe samyathil unmaiyum pesa theriyatha avanai ninaithu sinthikka ungakalai pondra nabarkal than sirantha vaithiyam
ReplyDeleteநன்றி தோழா....
Delete